tamilnadu

உதகை நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்து 80 பறிமுதல்

உதகை, மார்ச் 1- உதகை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் அதிரடி  சோதனை நடத்தியதில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்து 80 பறிமுதல் செய் யப்பட்டது. உதகை நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டு களில் உள்ள கடைகள், வணிக நிறுவனங் கள், தங்கும் விடுதிகள் உணவகங்கள் உள் ளிட்டவைகளுக்கு ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் கடை உரிமம் புதுப்பிக்கப்படும். இதற்காக உரிமையாளர்கள் நகராட்சி பொது சுகாதார அதிகாரிகளிடம் சான்றிதழ் பெற வேண்டும். இந்த  சான்றிதழ்களை வழங்குவதற்கு சுகாதார அதிகாரிகள் உரி மையாளரிடம் லஞ்சம் பெறுவதாக உதகை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்கு ரக சிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் ஆய்வாளர் கீதா லட்சுமி தலைமையில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சனியன்று மாலை பொது சுகாதார பிரிவில் அதிரடி சோதனை யில் ஈடுபட்டனர். அப்போது கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்து 80 பணத்தை  பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சுகா தார ஆய்வாளர்கள் பாஸ்கரன், மகாராஜா, தியாகராஜன், ஞானசேகர் ஆகிய நான்கு பேரிடம் தொடர்ந்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.