tamilnadu

உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பண்ணை இயந்திரங்கள் வழங்கல்

நீலகிரி, ஜூன் 1- நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைதுறையின் மூலம் பல்வேறு  வகையான செயல்திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு வருகின்றன. இதன்படி, கூட்டுப்பண்ணையத் திட் டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 2019-20 ஆம் ஆண்டு மாவட்டத்தில் ஒரு குழுவிற்கு 20 விவசாயிகளை ஒன்றிணைத்து உழவர் ஆர்வலர் குழு என்று 80 விவசாய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த உழ வர் ஆர்வலர் குழுவை ஒன்றிணைத்து 16 உழவர் உற்பத்தி யாளர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உருவாக்கப்பட்ட ஒவ்வொரு உழவர் உற் பத்தியாளர் குழுவிற்கும் அரசின் சார்பாக பண்ணை இயந்தி ரங்கள் வாங்க தொகுப்பு நிதியாக ரூ.5 லட்சம் வழங்கப் பட்டது. இதன் அடிப்படையில் அரசின் தொகுப்பு நிதி யில் இருந்து 52 பண்ணை இயந்திரங்கள் வாங்க ஓப் புதல் அளிக்கப்பட்டு, தோட்டக்கலைத்துறை சார்பில் உழவர் உற்பத்தியாளர் குழக்களுக்கு வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் சிவ சுப்ரமணியம் சாம்ராஜ், உதகை கோட்டாட்சியர் சுரேஷ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்டபட பலர் கலந்து கொண்டனர்.