உதகை, மார்ச் 15- உதகையில் குடிநீருடன் கழிவுநீர் கலப்பதைத் தடுத்து குடிநீர் குழாய்களை மாற்றி அமைத்திட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சிக்குட்பட்ட கேர்ன்ஹில் மஞ்சனக்கொரை பகுதியில் நகராட்சி நிர்வா கம் குடிநீர் குழாயை கழிவுநீர் கால்வாயில் அமைந்துள்ளது. இதனால் குடிநீர் குழாய்கள் துருப்பிடித்து விரிசல் ஏற்பட் டுள்ளது. இதன் மூலம் கழிவுநீரானது, குடி நீருடன் கலந்து விடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், இக்குடிநீரை குடிப்பதால் நோய்கள் ஏற்பட்டு சுகாதார சீர் கேடு ஏற்படுவதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே சம்பந்தப்பட்டத் துறையினர் போர்க்கால அடிப்படையில் கழிவுநீர் கால்வாயில் அமைக் கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களை மாற்றி அமைத்திட வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுக்கின் றனர்.