tamilnadu

img

நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பின் ஒருவருக்கு கொரோனா

நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பின் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருந்து நியூசிலாந்திற்கு கடந்த ஜூலை 30ம் தேதி வந்த நபர்க்கு 3 வது நாளில்  கொரோனோ பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை என தெரியவந்தது. ஆனால் அவர் வந்த 9 நாட்களுக்கு பின் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் ஆங்கிலாந்து பகுதியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
இந்நிலையில் நியூசிலாந்து நாடு கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டது என அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அறிவித்திருந்த நிலையில், 102 நாட்களுக்கு பின் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.