பெர்லின், ஆக. 2- கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட கட்டுப் பாடுகளுக்கு எதிராக ஜெர்மனி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் போது ஜெர்மனியில் பாதிப்பு குறைவு என்றாலும் கடந்த சில தினங்களாக அங்கு தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 900 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்பால் 7 பேர் பலியாகியுள்ளனர். ஜெர்மனியில் கடந்த ஏப்ரல் முதல் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப் பட்டது. இருப்பினும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்ற விஷயங்கள் மக்களிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், வைரஸ் பரவலுக்கு எதி ராக கொண்டுவரப்பட்டுள்ள கட்டுப் பாடுகளுக்கு ஜெர்மனி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். தலைநகர் பெர்லி னில் திரண்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் , கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான வாசகங்கள் தாங்கிய பதாகைகளை ஏந்திய படி ஊர்வலமாக சென்றனர். மாஸ்க் அணிய வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளும் தங்களின் தனி மனித சுதந்திரத்தில் தலையிடுவ தாக உள்ளது எனவும் போராட்ட த்தில் ஈடுபட்டவர்கள் கூறினர். கட்டுப் பாடு விதிகளுக்கு எதிராக போராட்ட த்துக்கு ஏற்பாடு செய்தவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெர்மன் அதிகாரிகள் தெரிவித்தனர்.