tamilnadu

img

திடீரென மூடப்பட்ட ஜெர்மனியின் முக்கிய விமான நிலையம்

ஜெர்மனியின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றான ஹாம்பர்க் விமான நிலையம் திடீரென்று மூடப்பட்டுள்ளது.

ஜெர்மனியின் முதன்மை விமான நிலையங்களில் ஒன்றான ஹாம்பர்க் விமான நிலையம் அருகே இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து பாதுகாப்பு கருதி விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. மேலும், விமானங்கள் தரையிறங்கவோ அல்லது இங்கிருந்து கிளம்பவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உலகப் போர் முடிவுக்கு வந்து சுமார் 75 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு வெடிகுண்டு, ஹாம்பர்க் விமான நிலையம் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த குண்டின் எடை சுமார் 450 கிலோ என்றும், தற்போது அந்த வெடிகுண்டை செயலிழக்க செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முன்னதாக, கடந்த மே மாதம் அமெரிக்க தயாரிப்பான 1000 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு ஒன்றையும் கண்டெடுத்தனர். இதனையடுத்து சுமார் 6,000 பொதுமக்களை அப்பகுதியில் இருந்து பாதுகாப்பு கருதி அப்புறப்படுத்தினர்.