tamilnadu

img

நிறுத்தப்பட்ட பேருந்தை இயக்க வலியுறுத்தி திருச்செங்கோட்டில் பொதுமக்கள், மாணவர்கள் சாலை மறியல்

நாமக்கல், நவ.19- நாமக்கல் மாவட்டம்,  திருச்செங்கோட்டில்  முறையாக பேருந்து இயக் கக்கோரி செவ்வாயன்று மாணவர்கள், பொதுமக்கள் சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர்.  நாமக்கல் மாவட்டம்,  குமாரபாளையத்தில்  இருந்து திருச்செங்கோட் டிற்கு வெப்படை, ஆனங் கூர், தேவனாங்குறிச்சி,  சூரியம் பாளையம், கவுண் டம்பாளையம் வழியாக தினந்தோறும் காலை 8  மணிக்கு இரண்டு அரசு  பேருந்துகள் இயக்கப் பட்டு வந்தது.   இதில் E5 என்ற  எண்  கொண்ட  பேருந்தில் பள்ளிக் குழந்தைகள் மற்றும்  வேலைக்கு செல்பவர்கள் திருச்செங்கோடு நகருக்கு வர வசதியாக இருந்தது.  இந்நிலையில் E5 என்ற அரசு பேருந்து கடந்த 5 நாட்களுக்கு முன்  திடீ ரென நிறுத்தப்பட்டுள்ளது. இதைக்  கண்டித்து திருச்செங்கோடு, சூரியம் பாளையம் பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளும் அரசுப் பேருந்தை  சிறைபிடித்து சாலை மறியலில் ஈடு பட்டனர். மறியல் குறித்து தகவலறிந்த திருச்செங்கோடு நகர காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத் தினர். நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்தை உடனே இயக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால்  காவல்துறையினர் மறியலில் ஈடுப்பட் டவர்களை அப்புறப்படுத்துவதுதிலே  இருந்தனர். இதனால் காவல்துறையின ருக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதை யடுத்து காவல்துறையினர் கூடிய விரைவில்  பேருந்து இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.  இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்,  பள்ளி செல்லும் குழந்தைக் காக இரண்டு அரசு பேருந்துகள் இயக்கப் பட்டு வந்தது. இதில் E5 எண்  கொண்ட  அரசுப் பேருந்து கடந்த 5நாட்களுக்கு  முன்பு எந்தவிதமான முன்னறிவிப்பு  இன்றி நிறுத்தி விட்டனர். இதனால்  அரசு வழங்கிய இலவச பயண அட்டை  உள்ள குழந்தைகள்  பள்ளிக்கு செல்ல  முடியாமல் சிரமத்திற்குள்ளாகினார்கள். இதனால் வரும் பேருந்தில் செல்லுவ தால் பயணிகள் கூட்டம் அதிகமாக  உள்ளதால், மாணவர்கள் படியில்  தொங்கிய படி செல்கின்றனர்.  இதனால்  ஏதேனும் விபத்து ஏற்படும் சூழல் உரு வாகியதால், மீண்டும் பேருந்தை இயக்க  வலியுறுத்தி சாலைமறியல் ஈடுபட்டோம்  என தெரிவித்தனர்.