tamilnadu

img

நாமக்கல்லில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடுகள்

நாமக்கல், மார்ச் 8- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக் கான முன்னேற்பாடு குறித்து கலந்து ரையாடல் நிகழ்வு மாநில தேர்தல் ஆணையர் தலைமையில் சனியன்று நாமக்கல்லில் நடைபெற்றது.  நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில் நகர்ப்புற உள் ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த கலந்துரையாடல் மாநில தேர்தல் ஆணையர் இரா.பழனி சாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் முன் னிலை வகித்தார். நாமக்கல் மாவட் டத்தில் உள்ள 5 நகராட்சிகள், 19 பேரூ ராட்சி பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணி கள் குறித்து நகராட்சி ஆணையாளர் கள் மற்றும் பேரூராட்சி செயல் அலு வலர்களுடன் கலந்துரையாடல் நடை பெற்றது.  அப்போது, வார்டு வரையறை பணி களை விரைந்து முடிக்குமாறு மாநில தேர்தல் ஆணையர் அறிவுறுத்தினார். தேர்தல் பணியில் ஈடுபட விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் அலுவலர்களுக்கு சரியான முறையில் பயிற்சி வழங்க வேண்டும், வாக்குச்சா வடிகளில் மின்வசதி, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வச திகள் முழுமையாக உள்ளனவா என்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யு மாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தி னார். தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் பொருத்த பேரூராட்சி அலுவல கங்களில் தேவையான இடவசதி உள் ளதா? என்று கேட்டறிந்து உறுதி செய் தார். இந்த கூட்டத்தில் திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கோ. மலர்விழி, மாவட்ட ஆட்சியரின் நேர் முக உதவியாளர்(உள்ளாட்சி தேர் தல்) மீராபாய், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சி.சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர் (தேர்தல்) அருளா ளன் உள்பட நகராட்சி ஆணையாளர் கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.