நாமக்கல், ராசிபுரம் அருகேயுள்ள அணைப்பாளையம் கிராமத்தில் இரு சிறுமிகளைப் பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக 75 வயது முதியவர் உட்பட 6 பேரை காவல்துறையினர் திங்களன்று கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே 12 மற்றும் 13 வயதுடைய சிறுமிகள் இருவரை அதே பகுதியைச் சேர்ந்த சிலர் தொடர்ந்து பல மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி வருவதாக, நாமக்கல் மாவட்ட குழந்தைகள் நலப் பாதுகாப்பு அலுவலருக்குத் தகவல் கிடைத்தது. இதனை விசாரித்த குழந்தைகள் நல அலுவலர்கள், 75 வயது முதியவர் உட்பட பலர் இரு சிறுமிகளையும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதை உறுதி செய்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட ராசிபுரம் மகளிர் காவல் துறையினர், அப்பகுதியைச் சேர்ந்த சிவா (எ) சங்கர் (26), சண்முகம் (45), ஊமையன் (எ) முத்துசாமி (75), மணிகண்டன் (30), சூர்யா (23), செந்தமிழ்ச் செல்வன் (31) ஆகிய 6 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்துள்ளனர்.