உதகை, ஆக. 27- கூடலூரில் பல ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் 110 கே.வி துணை மின் நிலையப் பணியை முழுமைப் படுத்த கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதுகுறித்து கூடலூர் உபமின் நிலைய நடவடிக்கைக் குழுவின் தலை வர் என்.வாசு தமிழக முதல்வர், மின்சா ரத்துறை அமைச்சர், மின்வாரியத் தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, நீல கிரி மாவட்டம், கூடலூர் நகராட்சியில் 66 கே.வி திறன்கொண்ட துணைமின் நிலையத்தை 110 கே.வி திறன் கொண்ட துணைமின் நிலையமாக மாற்ற வேண்டும் என்பது இங்குள்ள மக்களின் நீண்டகால கோரிக்கை. தமிழகத்தில் 66 கே.வி உள்ள ஒரே பகுதி கூடலூர் நகராட்சி மட்டுமே. இதனை மாற்ற கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் கடிதங்களும், தீர்மானங் களும் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், 2015 ஆம் ஆண்டு இத்துணைமின் நிலையத்தை 110 கே.வி துணைமின் நிலையமாக தகுதி உயர்த்த தமிழக அரசு ஒப்புதல் அளித்து பணிகள் துவக்கப்பட்டது. அதன்படி, உதகை கிளன்மோர்கன் முதல் கூட லூர் வரையில் மின்கோபுரம் அமைத்து கம்பிகள் இழுக்கும் பணி சுமார் 40 சதவிகிதம் முடிவடைந்தது. இதன்பின் னர் மின்வாரிய அதிகாரிகள் உப மின் நிலையத் திட்டத்தை ஒருதலை பட்சமாகக் கைவிட்டுச் சென்றனர். இப்பகுதியில், மூன்று லட்சம் மக் கள் வாழ்ந்து வருகிறார்கள். தற் போது இங்கு இயங்கும் 66 கே.வி துணை மின் நிலையத்தால் மக்களின் அன்றாட மின் தேவையை பூர்த்தி செய்ய இயலாது. அதோடு மாணவர் களின் இணையவழிக் கல்வியும், தொழில்களும் கடுமையாக பாதிக்கி றது. எனவே, இவ்விவகாரத்தில் தமி ழக முதல்வர் உடனடியாக தலையிட்டு கூடலூரில் 110 கே.வி துணை மின் நிலையம் அமைத்திட உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று, அக் கடிதத்தில் கூறியுள்ளார்.