நாகர்கோவில், ஆக.19- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நாகர்கோவில் பார்வதிபுரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தணிக்கை குழு அதிகாரிகள் அளித்த தகவலின் அடிப்படையில் 16 ஆவது மத்திய நிதி ஆணைக் குழு பரிந்துரையின் அடிப்படை யில் தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 5920 கோடி நிதியில் 2243 கோடி ரூபாய் மட்டுமே செலவழிக்கப்பட்டு 3600 கோடி ரூபாய் திருப்பி அனுப்பப் பட்டுள்ளது. பல நேரங்களில் மத்திய அரசு மாநிலத்துக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என குற்றம்சாட்டி வருகிறோம். ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் 3600 கோடி செலவிடப்படாமல் திருப்பி அனுப்பப்படுவது மிகப்பெரிய அவமானகரமான செயல். மாநில அரசு என்ன செய் கிறது? ஒரு திட்டத்தை அமலாக்கு கிறபோது அதிலிருந்து என்ன கமிஷன் கிடைக்கும் என யோசிக் கிறார்களே தவிர மத்திய அரசு அளித்த நிதியை பயன்படுத்துவது குறித்து யோசிக்கவில்லை. இது தமிழக மக்களுக்கு மாநில அரசு செய்யும் மிகப்பெரிய துரோகம். மாநில அரசு நிர்வாகம் எந்த அளவுக்கு தரம் தாழ்ந்துள்ளது என்பதற்கு இதைவிட உதாரணம் தேவையில்லை. பால் விலை ஒரு லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. 4 ரூபாய் உற்பத்தியாளர்களுக்கு உயர்த்தி வழங்குகிறோம், அதனால் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என அமைச்சர் கூறியுள்ளார். மாநில அரசு பால் வியாபாரம் செய்யவில்லை. பால் உற்பத்தி யாளர்களுக்கு விலையை உயர்த்தி வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் மாநில அரசுதான் அதற்கான விலையை கொடுக்க வேண்டுமே தவிர விலையை உயர்த்தக்கூடாது. இதனை மாநில அரசு மறுபரி சீலனை செய்ய வேண்டும். வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு கோழி வழங்கும் திட்டத்தில் தகுதி உள்ள பயனாளிகளுக்கு கோழி வழங்கு வதை விட்டு விட்டு ஆளுங்கட்சி யினருக்கு விநியோகம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. தகுதி யுள்ள பயனாளிகளுக்கு கிடைக்கும் வகையில் கோழி வழங்கும் திட்ட த்தை செயல்படுத்த வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிப்புக்குள்ளாகி யுள்ளது. மாநில காவல் துறை குமரி மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில் அதிகரித்து வரும் கொலை கொள்ளைகளை தடுப்பதற்கு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. கொலை கொள்ளைகளை தடுக்க நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கு பதிலாக மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட ஜன நாயக அமைப்புகள் ஆர்ப்பாட்டம், தர்ணா, ஊர்வலம் உள்ளிட்ட இயக்கங்களுக்கு அனுமதி மறுத்து தடை செய்கிறது. அதை மீறி நடந்தால் அவர்கள் மீது வழக்கு போடப்படுகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. குமரி மாவட்டத்தில் கருங்கல் அருகே செல்லங்கோணம் லீலாபாய் என்கிற பெண்மணியை வள்ளியூர் மகளிர் காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவர் ரத்த வாந்தி எடுத்ததால் அவரை வீட்டுக்கு கொண்டு வந்து, அங்கு யாரும் இல்லாததால் அவரை திரும்ப காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துள்ளார். அவரது உடலை அவசர அவசரமாக உடற் கூறாய்வு செய்து எரித்துள்ளனர். இந்த மரணத்தை காவல் நிலைய மரணமாக எடுத்து சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது. பாஜக தமிழகத்தில் யாரை பிடித்தாவது சவாரி செய்து ஆட்சியை பிடிக்கலாம் என முயற்சி செய்கிறது. ரஜினி ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 வது சட்டபிரிவை நீக்கிய பிறகு, மோடியும், அமித்ஷாவும் கிருஷ்ணர், அர்ஜுனன் போன்றவர்கள் என்கிறார்கள். மக்கள் அமித்ஷா யார் என புரிந்து விட்டார்கள். ரஜினியும் அமித்ஷா யார் என போகப்போக புரிந்து கொள்வார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்கு சாவடிகளிலும் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களையும், ஒப்புகை சீட்டையும் ஒப்பிட்டு வாக்குகளை கணக்கிடவேண்டும். ஆர்.எஸ்.எஸ். தலைமை யிலான பாஜக அரசு தேர்தல் ஆணை யம் உட்பட எல்லா துறைகளையும் தனக்கு சாதகமாகவே வைத்து ள்ளது. அனைத்து துறைகளிலும் இரண்டாவது முறை பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இந்துத்துவ கருத்தியல் கொண்டவர்களை அதிகாரிகளாக பதவிகளில் அமர்த்தி வருகிறது. புனேவில் ஆர்.எஸ்.எஸ் ராணுவகல்லூரி அமைக்கிறார்கள். இந்துத்துவ கொள்கையை வேக வேகமாக அமல்படுத்த தொடங்கியுள்ளார்கள். இந்தியா என்பது ஜனநாயக மதசார்பற்ற கூட்டாட்சி கொண்ட நாடு. இந்துத்துவ கொள்கை திணிப்பை ஒருபோதும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என அவர் கூறினார். இதில், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது, மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி, மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.லீமாறோஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எ.வி.பெல்லார்மின் ஆகியோர் உடனிருந்தனர்.