tamilnadu

img

தமுஎகச கலை இலக்கிய இரவு

நாகப்பட்டினம், அக்.15- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், நாகை மாவட்டம், கீழையூர் ஒன்றியக் கிளை சார்பில், வேளாங்கண்ணியில் ஞாயிற்றுக் கிழமை அந்தி முதல் விடியல் வரை கலை இலக்கிய இரவு நடைபெற்றது.  நிகழ்ச்சிக்குக் கிளைத் தலை வர் சி.பி.செல்வம் தலைமை வகித் தார். கெளரவத் தலைவர் ஜூலியட் அற்புதராஜ், அ.கிங்ஸ்லி ஜெரால்ட், டபிள்யூ.ஜான், கே.எம். பகுருதீன், மரிய சார்லெஸ் உள்ளிட்டோர் முன் னிலை வகித்தனர். வேளாங்கண்ணிப் பேரூராட்சி முன்னாள் தலைவர், வர வேற்புக்குழுத் தலைவர் ஆ. தாமஸ் ஆல்வாஎடிசன் வரவேற்புரையாற்றி னார். த.மு.எ.க.ச. மாவட்டத் தலைவர் ந.காவியன் துவக்கவுரையாற்றினார்.  த.மு.எ.க. மாவட்டச் செயலாளர் ப.பாலசுந்தரம், மாநிலக்குழு உறுப்பி னர் நா.சத்தியசீலன், பாலக்குறிச்சி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் எம்.முருகையன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் ப. சுபாஷ் சந்திரபோஸ், மாவட்டக்குழு உறுப்பினர் கே.டி.முருகையன், தீண் டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டப் பொருளாளர் பி.ஏ.ஜி.சந்திரசேகரன், ஆ.நடராஜன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். “நெஞ்சு பொறுக்குதில்லையே…” என்னும் பொருளில் தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைச் செய லாளர் கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம், ”பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோ மடா…” என்னும் பொருளில் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநி லத் தலைவர் எஸ்.வாலண்டினா, ”புதிய கல்விக் கொள்கை- வருணா சிரமத்தின் மாற்று…” என்னும் பொரு ளில் த.மு.க.எ.ச. மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் எழுத்தாளர் களப் பிரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். புதுகை பூபாளம் கலைக் குழு வின் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த ‘அரசியல் நையாண்டி தர்பார்’, சிவ கங்கைக் கருங்குயில் கலைக் குழு வின் கலை நிகழ்ச்சிகள், புதுவை சப்தர் ஹஷ்மி கலைக் குழுவின் மக்களிசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன. கவிஞர்கள் ஆவராணி ஆனந்தன், ஆ.மீ.ஜவகர் கவிச்சரங்கள், வெண் மணி மோகன் இங்கர்சால், காரை கானா அகிலன், ரூரோரான் ஆகியோ ரின் நாட்டுப்புறப் பாடல்களுக்கு சிறப்புத் தவில் கலைஞர் ஜி.வீரராக வன் தவில் வாசித்தார். சின்னதும்பூரைச் சேர்ந்த ஆவ ணப்பட இயக்குநர் சு.கோபு, ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விளை நிலங்கள் பாழாவதை மேடைப் பின்னணி ஓவிய மாக வரைந்திருந்த இரா.காளிதாஸ், அரங்க நெறியாளுகையைச் சிறப்புற செய்த ஆதி.உதயகுமார், ச. தமிழ்ச்செல்வன், எம்.பகத்சிங் மற்றும் கலை இலக்கிய இரவு ஒருங்கி ணைப்பாளர்கள் பலரும் மேடையில் கெளரவிக்கப் பட்டனர். குவளை மு. வீரமணி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். கிளைச் செயலாளர் இரா. சிவனேசன் நன்றி கூறினார்.