tamilnadu

சீர்காழி பகுதியில் அறுவடை எந்திரங்கள் தட்டுப்பாடு

சீர்காழி, பிப்.6- சீர்காழி- கொள்ளிடம் பகுதியில் அறுவடை எந்திரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நடவடிக் கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  நாகை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் சுமார் 13 ஆயிரம் எக்டேர் நிலப்பரப்பில் விவ சாயிகள் சம்பா நெற்பயிர் சாகுபடி செய்துள்ள னர். இந்த நெற்பயிர் தற்பொழுது அறுவடை க்குத் தயாராக உள்ளதால், அறுவடை செய்வதில் விவசாயிகள் தீவிரம் காட்டி வரு கின்றனர். அறுவடை பணிக்கு ஆள் பற்றாக் குறை ஏற்பட்டுள்ளதால் அறுவடை செய்ய போதிய ஆட்கள் கிடைக்கவில்லை. அனைத்து வயல்களிலும் பயிர் அறு வடைக்குத் தயார் நிலையில் உள்ளதால், விவ சாயிகள் ஒரே நேரத்தில் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். திடீரென மழை பெய்து விட்டால்  அறுவடை பணி பாதிக்கப்படு வதுடன் அதிக சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை கருத்தில் கொண்டு அறுவடைப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அறுவடை எந்திரம் தட்டுப்பாடாக இருப்பதால் இதுவரை கொள்ளிடம் வட்டா ரத்திலேயே 30 சதவிகித அறுவடை மட்டுமே நிறைவு பெற்றுள்ளது. மீதமுள்ள 70 சத விகிதம் இன்னும் அறுவடை செய்ய வேண்டி யுள்ளதாக உள்ளது. இது குறித்து விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் சிவப்பிரகாசம் பிள்ளை கூறுகை யில், நாகை மாவட்டத்திற்கு வேளாண் பொறி யியல் துறை சார்பில் 11 அறுவடை இயந்தி ரங்கள் வாடகைக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் இரண்டு எந்திரங்கள் பழுதடைந்துள்ள நிலையில் மீதம் 9 இயந்திரங்கள் மட்டுமே தற்பொழுது செயல்பட்டு வருகின்றன. கொள்ளிடம் மற்றும் சீர்காழி ஆகிய இரண்டு ஒன்றியங்களுக்கும் ஒரு இயந்திரம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதனால் தனியா ரிடமிருந்து விவசாயிகள் அதிக வாடகை கொடுத்து அறுவடை எந்திரம் பெற்று பயன் பெற்று வருகின்றனர். தனியாரிடமிருந்தும் போதிய இயந்திரம் கிடைக்கவில்லை. இத னால் இயந்திரம் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் நலன் கருதி வேளாண் பொறியியல் துறை சார்பில் அதிக எண்ணிக்கையில் அறுவடை இயந்திரம் கொள்ளிடம் பகுதியில் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.