தரங்கம்பாடி, மார்ச் 23- நாகை மாவட்டம் மயி லாடுதுறை அருகே இளை யாளூரில் சாலை பராம ரிப்பிற்காக நிறுத்தப்பட்ட பேருந்து சேவையை சாலை தரம் உயர்த்தப்பட்டும் மீண்டும் இயக்கப்படாததால் பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படு கின்றனர். மீண்டும் பேருந்து சேவையை தொடர்ந்திட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை அளித்துள்ளனர். போக்குவரத்து கழக மயிலாடுதுறை பணிமனை யில் இருந்து மன்னம்பந்தல், குளிச்சார், அறங்கக்குடி வழி யாக இளையாளூர் பகுதிக்கு தடம் எண் ஏ4 பேருந்து சேவை இயங்கி வந்தது. சாலை பராமரிப்பு பணிக் காக பேருந்து சேவை நிறுத் தப்பட்டது. ஆனால் சாலை பணி முடிந்து 6 மாதம் கடந்தும் பேருந்து சேவை மீண்டும் துவக்கப்பட வில்லை. இதனால் இளையா ளூரைச் சேர்ந்த 5 கிராம மக்க ளும், சுற்றுவட்டார கிராம மக்களும் சுமார் 2 கிமீ தூரம் நடந்து வந்து பேருந்து பிடித்து செல்கின்றனர். கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து விட்ட தால் பேருந்தை விட்டு வீடு செல்ல கடும் வெயிலில் நடந்து செல்கின்றனர். முதி யோர்கள் வெயிலால் ஆரோக்கிய குறைவு ஏற்பட்டு உடல்நலம் குன்றி வருகின்றனர். எனவே நிறுத் தப்பட்ட பேருந்து சேவையை மீண்டும் இயக்கிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.