தரங்கம்பாடி டிச.3- மயிலாடுதுறையை தலைமையிட மாகக் கொண்டு புதிய மாவட்டத்தை அறிவிக்க வேண்டுமென கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை எழுந்து வந்த நிலையில் அண்மையில் வேறு சில புதிய மாவட்டங்கள் மட்டும் புதிய தாக அறிவிக்கப்பட்டது. இது ஒருபுறம் இருக்க நாகை மாவட்டத்தில் அமைய வுள்ள புதிய மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க வேண்டு மென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் நாகப்பட்டினம் அருகே யுள்ள ஒரத்தூர் என்கிற கிராமத்தில் மருத்துவக் கல்லூரி கட்ட ஒப்புதல் வழங்கியுள்ளது. அரசின் இந்த முடி வை கண்டித்தும், மாவட்டமாக அறி விக்காததை கண்டித்தும் மயிலாடு துறை, குத்தாலம் செம்பனார்கோவில், ஆக்கூர் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயி ரத்துக்கும் அதிகமான கடைகளை அடைத்து வர்த்தகர்கள் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர். உடனடியாக நியாய மான கோரிக்கையை அரசு ஏற்க வில்லையெனில் தொடர் போராட் டங்களை நடத்துவோம் என அறி வித்துள்ளனர்.