சீர்காழி: இந்திய மாணவர் சங்க நாகை மாவட்ட மாநாடு சீர்காழியில் வியாழன் அன்று நடைபெற்றது. மாணவிகள் உபகுழு என்.தயானி தலைமை ஏற்றார். டி.நந்தினி, சத்யா, பிருந்தா, காயத்ரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்எப்ஐ நாகை மாவட்டச் செயலாளர் ஏ.அமுல் காஸ்ட்ரோ மாநாட்டைத் துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட்டத் தலைவர் பி.மாரியப்பன், துணை செயலாளர் மு.குமரேசன், சே.கபிலன் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். மாநாட்டில் மாநில கன்வீனர் எஸ்.காவியா நிறைவுரையாற்றினார். முன்னதாக யு.மேகலா வரவேற்பு ரையாற்றினார். மாநாட்டில் 15 பேர் கொண்ட உபக்குழுக்களை தேர்வு செய்தனர். அதில் புதிய மாவட்ட கன்வீனராக என்.தயானி தேர்வு செய்யப்பட்டார். மாநாட்டில் 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். நிறைவாக புதிய கன்வீனர் சத்தியா நன்றி கூறினார்.