மயிலாடுதுறை, செப்.12- பாரதிதாசன் பல்கலைக்கழக அளவிலான கிரிக்கெட் மற்றும் பூப்பந்தாட்ட போட்டியில் மன்னன்பந்தல் ஏ.வி.சி. கல்லூரி மாணவர்கள் சாதனைப் படைத்துள்ளனர். பாரதி தாசன் பல்கலைக்கழக அளவிலான கிரிக்கெட் போட்டி திருச்சியில் உள்ள கல்லூரியில் அண்மையில் மூன்று நாட்கள் நடந்தது. இதில் 51 கல்லூரிகளின் அணிகள் கலந்து கொண்டன. ஏவிசி கல்லூரி அணி சார்பில் எம்.காம் முதலாமாண்டு மற்றும் இறுதியாண்டு மாணவர்கள் ஆர்.அஸ்வின்ஆனந்த், அ.அபிநாஷ், ப.அருள்குமார், பி.காம் முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்கள் க.மாதேஷ்வரன், த.கௌதமன், ஜா.ஜாவித்அலி, வே.ஆனந்த்ராஜ், பா. சூர்யா பி.எஸ்.சி வேதியியல் இறுதியாண்டு மாணவர் க. கார்த்திக்,பி.ஏ பொருளியியல் இறுதியாண்டு மாணவர் மு. கரண், பி.எஸ்.சிகணினி அறிவியியல் இரண்டாம் மற்றும் இறுதியாண்டு மாணவர்கள் டி.சுகன், ஹ.நவீன்குமார், ஏ.நிதிஷ்பிராங்களின், பி.எஸ்.சி தாவரவியல் முதலா மாண்டு மாணவர் எஸ்.அபிஷேக்,பி.எஸ்.சி இயற்பியல் மாணவர் டி.ஆரோன்,வணிகமேலாண்மையை சேர்ந்த முதலாமாண்டு மாணவர் சி.கிஷோர்பாலா ஆகியோர் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு பல்கலைக்கழக அளவில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ள னர். இதே போன்று பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் பொன்னமராவதி அருகே மேலசிவபுரியில் உள்ள கல்லூரி யில் நடந்த இரண்டு நாட்கள் பூப்பந்தாட்ட போட்டியில் 15 கல்லூரிகளின் அணிகள் கலந்து கொண்டன. ஏவிசி கல்லூரி அணி சார்பில் முதலாம் மற்றும் இரண்டாமாண்டு பிஎஸ்சி கணிதம், இயற்பியல், வேதியியல்,கணினி அறிவி யல் இரண்டாமாண்டு பி.ஏ ஆங்கிலம், பி.கா.ம் மூன்றா மாண்டு பி.எஸ்.சி வேதியியல், ஆகிய பாடபிரிவுகளை சேர்ந்த மாணவர்கள் பி. அரவிந்த், வி.ஆதிராஜ், யூ.சர் குணன், எம்.குணசேகரன், பி.மதிசெல்வன், பி.பிரதீப், வி. குபேந்திரகுணபாலன், ஆர்.குருபிரகாஷ், ஆர்.அர விந்தன், கே.வெங்கட்பிரசன்னா ஆகியோர் பல்கலைக் கழக அளவில் மூன்றாமிடம் பெற்று சாதனைப் படைத் துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரியின் ஆட்சி மன்ற குழு தலைவர் என்.விஜயரெங்கன், செயலர் கே. கார்த்திகேயன், பொருளாளர் என்.ஞானசுந்தர் ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், முதல்வர் ஆர்.நாகராஜன், உடற் கல்வி இயக்குநர்கள் ஜெ.ராஜ்குமார், எம்.கீதா, பேராசிரி யர்கள் பாராட்டினர்.