tamilnadu

img

பிஎஸ்என்எல் ஊழியர்கள் போராட்டம்

நாகப்பட்டினம், மே 19- அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்க ளை நியமிப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகப்பட்டினம் பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் ஒப்பந்த ஊழியர்கள் கருப்புக் கொடி ஏந்திப் போராட்டம் செய்தனர். போ ராட்டத்திற்கு நிரந்தர ஊழியர்கள் சங்கத் தின் நாகைக் கிளைத் தலைவர் ஜே.அசோ கன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டச் செயலாளர் எம்.குருசாமி கோரிக்கையை விளக்கிச் சிறப்புரையாற்றினார். ஒப்பந்த ஊழியர் சங்கக் கிளைத் தலைவர் மணிகண் டுன், கிளைச் செயலாளர் பிரகாஷ், ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.