பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத்திட்டம் என பாரதிய ஜனதா கட்சியினர் பகட்டாக முழங்கிய, தூய்மை பாரதத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் வேலை செய்து வரும் மூன்றாயிரம் பேரின் வேலை பறிக்கப்படும் அச்சுறுத்தல் எழுந்துள்ளது. பணியாளர்களுக்கான ஒப்பந்த நிறுவனம் மாறியிருப்பதால் பணியாளர்களை கட்டாயப்படுத்திப் பணம் கேட்பதுடன், கையூட்டு தராவிட்டால் வேலை பறிபோகும் என்று மிரட்டி வருவதாகவும் பணியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பொதுவெளியில் மலம் கழிக்கும் நிலை இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று, காந்தியடிகளின் படத்தைப் போட்டு மத்திய பாஜக அரசு தூய்மை பாரதத் திட்டத்தை உருவாக்கியது. இத்திட்டத்தின் கீழ் பணி செய்வதற்காக 2017ஆம் ஆண்டு தனியார் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தமிழகத்தில் முதல் முறையாக திருப்பூர் மாநகராட்சியில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். திருப்பூர்மாநகராட்சியில் இத்திட்டப் பணிகளுக்கெனஒருங்கிணைப்பாளர் ஒருவர், மேற்பார்வை யாளர் 4 பேர் மற்றும் பரப்புரையாளர்கள் எனப்படும் பணியாளர்கள் 30 பேர் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்கியபோதே, “தொடக்கத்தில்இரண்டரை ஆண்டுகள் ஒப்பந்தப் பணியாளர்களாக வேலை செய்ய வேண்டியிருக்கும், அதன் பிறகு மாநகராட்சியில் நிரந்தரப் பணியாளர்களாக நியமிக்கப்படுவீர்கள்!’ என்று, ஆசை வார்த்தை கூறியுள்ளனர். அத்துடன் வேலையில் சேருவதற்கு கையூட்டும் கேட்டுப்பெற்றுள்ளனர். பலர் பல ஆயிரம் ரூபாய் கொடுத்து இந்த வேலையில் சேர்ந்ததாகத் தெரிவித்தனர்.
மாநகரில் வீடுகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வாங்கி உரம்தயாரிக்கும் ஆலைக்கு அனுப்ப வேண்டியதுதான் பரப்புரையாளர்களுக்கு பணி என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த வேலை மட்டுமின்றி அடுத்தடுத்து வெவ்வேறு வேலைகளுக்கும் இந்தப் பணியாளர்களை மாநகராட்சி நிர்வாகத்தினர் பயன்படுத்தினர். குறிப்பாக கொரோனா தொற்றுப் பரவல் ஏற்பட்ட நிலையில், யாருமே வெளியே வர அஞ்சிய நிலையில் இந்த பணியாளர்களைத் தான் உள்ளாட்சி நிர்வாகங்கள் பயன் படுத்தின.
கொரோனா பணி
கொரோனா நோயாளிகள் இருக்கும் வீடுகளுக்கு அனுப்பி அவர்களை மருத்துவமனைக்கு அனுப்புவது, குடும்பத்தாருக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய அழைத்துச்செல்வது, தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கு மளிகை, காய்கறி வாங்கித் தருவது என அனைத்து வேலைகளையும் உயிரைப் பொருட்படுத்தாது இந்த பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு ஒப்பந்தப்படி மாதம் ரூ.12 ஆயிரம் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இஎஸ்ஐ., பி.எப்., உள்ளிட்ட பிடித்தம் போக ரூ.10,800 பெற்று வந்தனர். மதுரை மண்டலம் உள்பட பிற மாநகராட்சிகளில் இந்த சம்பளத்தைக் கூட தராமல் ஆறாயிரம், ஏழாயிரம் என குறைத்துத் தருவதாகவும் பணியாளர்கள் தெரிவித்தனர். மேலும் மாநகராட்சி அதிகாரிகள் இவர்களை குறைந்தபட்சம் மனிதர்களாகக்கூட மதிக்காமல் கொத்தடிமை களைப் போல் நடத்தி வேலை வாங்கி வருவதாகவும் கூறுகின்றனர்.
கை மாறிய ஒப்பந்தம்
இந்த நிலையில்தான் இவர்களுக்கு தலையில் இடி இறங்கியது போல, வேறொருஒப்பந்த நிறுவனம் தூய்மை பாரதத் திட்டப் பணியை எடுத்திருப்பதாகவும், அவர்களிடம் இந்த பணியாளர்கள் தொடர்ந்து வேலை செய்ய வேண்டுமானால் பணம் தர வேண்டும் என்றும் கூறியுள்ளனர். ஏற்கெனவே ஐம்பதாயிரம், லட்சம் ரூபாய் எனப் பணம் கொடுத்து இந்த வேலைக்குச் சேர்ந்திருந்தும், நிரந்தரப் பணியாக மாறி விடும் என கனவு கண்டு கொண்டிருந்தவர் களுக்கு, இப்போது வேறொரு ஒப்பந்த நிறுவனம், பணியில் தொடர குறைந்தது ரூ.40ஆயிரம் தர வேண்டும் எனக் கேட்டதும்தான், ஏமாற்றப்படுவதை பணியாளர்கள் உணர்ந்தனர். இதிலும் கொடுமை என்னவென்றால், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு ஒரு இளைஞர் ரூ.1.80 லட்சம் கொடுத்து வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். அவருக்கு 8 மாதங்கள் சம்பளமாக ரூ.10 ஆயிரம் வீதம்80 ஆயிரம் பெற்றுள்ளார். அதுபோக இரண்டுமாத சம்பளம் பாக்கியுள்ளது. இதற்கிடையேபுதிய ஒப்பந்த நிறுவனமும் பணம் கொடுத்தால்தான் வேலை என கூறியுள்ளது. இதுபோல் ஒவ்வொருவரும் கடுமையான நெருக்கடிக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.முதலில் தமிழகம் முழுவதற்கும் ஒரே ஒப்பந்த நிறுவனம் இருந்தது. இப்போது வெவ்வேறு மாநகராட்சி, மண்டலங்களுக்கு வெவ்வேறு ஒப்பந்த நிறுவனங்கள் மாறி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட
... தொடர்ச்சி 3ம் பக்கம்