விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்திற்குட்பட்ட வி.சாத்தனூர் கிராமத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும், பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் 3 மாதத்திற்கு 5,000 ரூபாய் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கிளைச் செயலாளர் கே.கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் எம்.சுப்பராயன், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் எம்.சேகர், பி.நாகப்பன், கமலம், வாசுதேவன் உள்ளிட்ட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் ஊராட்சியின் எழுத்தர் செந்தில்குமாரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட செந்தில்குமார் வரும் வியாழக்கிழமை முதல் வேலை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.