தேனி:
தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்தாண்டு மே மாதம்நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங் களே உள்ள நிலையில் அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத் திற்கும் இடையே போட்டி நிலவுகிறது.அக்டோபர் 7-ஆம் தேதிமுதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளதாகசெயற்குழுக் கூட்டத்திற்குப்பின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அறிவித்திருந்தார். அதிமுக கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைக்கவேண்டுமென்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் வலியுறுத் தப்பட்டு வருகிறது.இந்த பரபரப்பான சூழ் நிலையில், கடந்த 2-ஆம் தேதி பெரியகுளத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் வந்தார். பின்னர் பெரியகுளம் அருகேகைலாசப்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் இரண்டு நாட்களாக தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல் வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட் டார். மேலும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் பெரிய புள்ளான், நீதிபதி, மாணிக்கம், சரவணன் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் தேனியில் ஆதரவு நிர்வாகிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் திங்கள்கிழமை பிற்பகல் சென்னை புறப்பட்டார்.புதன்கிழமை அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப் பட உள்ள நிலையில் துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சென்னை புறப்பட்டார்.