தேனி, ஜூன் 2- கம்பம் உழவர் சந்தையில் வியாபாரம் செய்ய அனுமதிக்கவேண்டும் என விவ சாயிகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் தேனி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். மனுவில் கூறப்பட்டிருப் பதாவது:- கொரோனா தொற்று நடவடிக்கை காரணமாக கம்பம் உழவர் சந்தை கடந்த 28- ஆம் தேதி அடைக்கப்பட்டது.அங் குள்ள 110 விவசாயிகள் நகராட்சி நிர்வா கம் மூலம் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்து வந்தனர். இந்த நிலையில் ஊரடங்கு தளர்வு செய் யப்பட்டு போக்குவரத்துக்கு உள்ளிட் டவை இயங்கி வரும் நிலை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது. வாடகை வாகனம் மூலம் விற்பனை செய்து வருவது தொடர்ந்து சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே அரசு வழங்கும் ஆலோசனையுடன், தக்க பாதுகாப்போடு கம்பம் உழவர் சந்தை யில் விவசாயிகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .எனவே கம்பம் உழவர் சந்தையில் காய்கறி விற்ப னைக்கு அனுமதிக்க வேண்டும். இவ் வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.