tamilnadu

தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி முக்கிய செய்திகள்

ஓணம் பண்டிகைக்கு முழு ஊரடங்கில் விலக்கு: சிபிஎம் வலியுறுத்தல்

நாகர்கோவில், ஆக.24- ஆகஸ்ட் 31 ஆம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு 30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பொது ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்குமாறு மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து கட்சியின் குமரி மாவட்டச் செய லாளர் ஆர்.செல்லசுவாமி, ஆட்சியர் பிரசாந்த் வட நேரேவுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறப்பட்டுள்ள தாவது: கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள கலாச்சாரங்கள் சங்கமிக்கும் பகுதியாக திகழ்கி றது. அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து 1956 - ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி தாய்த்தமிழகத்துடன் இணைந்தாலும் குமரி மாவட்ட மக்கள் பொங்கல் உள்ளிட்ட தமிழர் பண்டி கைகளைப் போலவே கேரள பண்டிகைகளையும், விழாக்களையும் மிகவும் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். கேரள மக்களின் மிகவும் முக்கிய மான பண்டிகையான ஓணம் பண்டிகை குமரி மாவட்ட மக்களும் அத்தப்பூ கோலத்துடன், மலை யாள கலாச்சார கூறுகளுடன் பல ஆண்டு கால மாக சாதி, மதம் கடந்து கொண்டாடி வருகின்றனர். குமரி மாவட்ட மக்களின் கலாச்சார பண்டிகை களில் ஒன்றாக கலந்து விட்ட இந்த ஓணம் பண்டி கையை இவ்வாண்டும் குமரி மாவட்ட மக்கள் விமரிசையாக கொண்டாட எதிர்நோக்கி உள்ளனர். இவ்வாண்டு ஓணம் பண்டிகை வரும் வரும் 31 - ஆம் தேதி  திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா ஊரடங்கின் காரணமாக அனைத்து ஞாயிற்றுகிழமைகளிலும் பொது ஊர டங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் மாவட்ட மக்கள் ஞாயிற்றுக்கிழமையன்று ஓணம் பண்டிகை கொண்டாட காய்கறிகள் உட்பட பொரு ட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இத னால் ஓணம் பண்டிகையை கொண்டாட இயலாத நிலை குமரி மாவட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே ஆகஸ்ட் 30 - ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை குமரி மாவட்டத்திற்கு பொது ஊரடங்கி லிருந்து விலக்கு அளிக்க மாவட்ட ஆட்சியர் நடவ டிக்கை எடுக்க வேண்டும் அதில் கூறப்பட்டுள்ளது.


சிறு, குறு விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைக்க மானியம்

திருநெல்வேலி, ஆக.24-தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத் தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட் டோர், சீர்மரப்பினர் வகுப்பை சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு புதிய ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்து டன் வங்கி கடன் வழங்கப்படுகிறது. அதிக பட்சம் ரூ.1 லட்சம் வரை கடன் வழங்கப் படும். இதற்கு ரூ.50 ஆயிரம் மானியம். உரிய சான்றுடன் தகுதியான விவசாயி கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறு பான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம் என நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா தெரிவித்துள்ளார்.


‘சிக்குன்குன்யா அறிகுறிகளை கொரோனாவுடன் குழப்பிக் கொள்ளாதீர் ‘

தென்காசி, ஆக.24- தற்போது பருவமழைக் காலம் என்ப தால் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தேங்கும் மிகக் குறைந்த அளவு தண்ணீர் கூட அதிக கொசு உற்பத்திக்கு வழி வகுத்து டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும்.  காய்ச்சல், இருமல், சளி, மூச்சிரைப்பு போன்ற சிறு உபாதைகள் தென்பட்டா லும் பொதுமக்கள் உடனே மருத்துவரை அணுக வேண்டும். டெங்கு, சிக்குன் குன்யா காய்ச்சல் அறிகுறிகளை கொரோ னா தொற்று அறிகுறிகளுடன் குழப்பிக் கொள்ளாமல் அருகிலுள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்தை உடனே அணுக வேண்டும்.  சாதாரண இருமல் என்று கவனம் செலுத்தவில்லை எனில், உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு இறப்பு நேரிட லாம். மேலும் அனைவருமே நாடித்துடிப்பு மற்றும் ஆக்ஸிஜன் உள்ளீட்டு அளவை பல்ஸ் ஆக்ஸீமீட்டர் கொண்டு அவ்வப் போது சோதனை செய்ய வேண்டும். இதன் மூலம் அறிகுறிகள் அற்று கொரோனா தொற்று உடையவர்கள் எளி தாகக் கண்டறியப்படுவர். கொதிக்க வைத்த குடிநீர் பருகுதல், முகக்கவசம் அணிதல், அடிக்கடி கைகழுவுதல் போன்ற எளிய நடைமுறைகளை பொது மக்கள் எப்போதும் தவறாது பின்பற்ற வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சி யர் அருண் சுந்தர் தயாளன் கேட்டுக் கொண்டுள்ளார்.


டயாலிசிஸ் சிகிச்சை: தாமதமின்றி அளிக்கக் கோரிக்கை

தூத்துக்குடி, ஆக.24- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் சார்பில் தலை வர் டாக்டர் பொ.பாலசுப்பிரமணியன் அனுப்பியுள்ள கோரிக்கை மனு: கொரோனா நெருக்கடி சூழ்நிலை யில் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவ மனைகளிலும் கொரோனா பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சை அளிப் பதற்கும், சர்க்கரை நோயாளிகளின் உயிர்களைக் காப்பதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.