தென்காசி, ஆக.22- தென்காசி புதிய மாவட்டத்தில் தாசில்தார், துணை தாசில்தார், முது நிலை வருவாய் ஆய்வாளர், இள நிலை வருவாய் ஆய்வாளர் ஆகிய பதவிகளுக்கு பதவி உயர்வுகளை விரைந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைக ளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கம் சார்பில் தென் காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்டத் தலைவர் செல்வநாயகம் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச் சித்துறை அலுவலர் சங்க மாவட்ட துணைத் தலைவர் ராஜசேகர், அரசு ஊழியர் சங்க மாவட்ட செய லாளர் துரைசிங், வருவாய்த் துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் சுப்பு, துணைத் தலைவர் செந்தில்ரா ஜன் ஆகியோர் பேசினர்.