tamilnadu

சிறந்த சாகச வீரர்களுக்கான டென்சிங் நார்கே தேசிய விருது  விண்ணப்பங்கள் வரவேற்பு

தூத்துக்குடி, ஜூன் 25- இந்திய அரசு, ஒவ்வொரு ஆண்டும் நாட்டிற்கு பெருமை  தேடித்தரும் சிறந்த சாகச வீரர்களுக்கு பல்வேறு பிரிவுகளில்  விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி, இந்திய  அரசின் 2019 ஆம் ஆண்டிற்கான ‘டென்சிங் நார்கே தேசிய சாகச விருது’க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இவ்விருதிற்கு விண்ணப்பிக்கும் சாதனையாளர்கள் நிலம், நீர் மற்றும் காற்று தவிர இவற்றிற்கு விதிவிலக்கான சாகச  திறன்களை பெற்றிருக்க வேண்டும். மேலும் 2017, 2018  மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் இவர்கள் செய்த சாதனை  நிகழ்வுகள் கணக்கில் கொள்ளப்படும். இதற்கான விண்ணப்ப  படிவம் மற்றும் இதர விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியான www.sdat.tn.gov.in-ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி  செய்யப்பட்ட விண்ணப்பங்களை தூத்துக்குடி மாவட்ட விளை யாட்டு அலுலலகத்தில் ஜூன் 29 தேதிக்குள் நேரில் சமர்ப்பிக்க  வேண்டும்.