tamilnadu

img

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க திறன் வளர்ப்பு பயிற்சி முகாம்

திருப்பூர், பிப். 24- சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாது காப்பு அலகு சார்பில் திறன் வளர்ப்பு பயிற்சி முகாமினை திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தொடங்கி வைத்தார். இம்முகாமில் குழந்தைகள் நலன், பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு குறித்து அரசு மற்றும் அரசு சாரா அலுவலர்களான கல்வித்துறை, மருத்துவத்துறை, காவல் துறை, மகளிர் திட்டம், குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் சமூக நலத்துறை, வருவாய்த்துறை, ‘இளைஞர் நீதிச் சட்டம், குழந்தைகள் உரிமைகள், குழந் தைகளுக்கு எதிரான வன் கொடுமைகள், குழந்தைகளுக்கு சிறந்த பாதுகாப்பு மற்றும் பரா மரிப்பு, பாலியல் வன்கொடுமை களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்” பற்றிய திறன் வளர்ப்பு குறித்து பிப்.24 முதல் மார்ச்.4 வரை ஏழு நாள்கள் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொண்டுள்ள அனைத்துத்துறை அலுவலர்களும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன் கொடுமைகள் மற்றும் குழந்தை களுக்கு எதிரான எந்த ஒரு குற்றமும் நடைபெறாமல் இருப்பதற்கு  சட்டங்களை முழுமையாக பின்பற்றி குழந்தை களின் பாதுகாப்பினை உறுதி செய்திட அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட  வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.  இந்நிகழ்வின் போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வம், திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் சுந்தரம், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.