தூத்துக்குடி, ஜூன் 23- சாதியைச் சொல்லி திட்டியவர்கள் மீது நடவடிக்கை கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தூத்துக்குடி மாவ ட்டக் குழுவினர், தூத்துகுடி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி.யிடம் மனு அளித்துள்ளனர். திங்களன்று காலை திருவை குண்டம் வட்டம் - பராங்குசநல்லூர் வரு வாய் கிராமம் ஆழ்வார் தோப்பு அருகே தாமிரபரணி ஆற்றில் அழகிய மணவாள புரம் வருவாய் கிராமம் செம்பூரில் வசிக்கும் தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் கணேசன்(29), சிவபால முருகன் (29) ஆகியோர் குளித்து கொண்டிருந்தனர். அப்போது பராங்குசநல்லூர் வரு வாய் கிராமம் ஆழ்வார்தோப்பில் வசிக்கும் பிற சமூகத்தை சார்ந்த இளை ஞர் ராமசாமி என்பவர் அவருடன் வந்த மற்றும் சிலர் ஆற்றில் குளித்து கொண்டி ருந்த கணேசனையும், சிவபாலனையும் சாதியை சொல்லி திட்டி ‘பள்ள பய ல்களே நீங்கள் எல்லாம் இங்கே குளிக்க கூடாது” என்று தடுத்துள்ளனர். இத னால் அவமானம் அடைந்த கணேசன் மற்றும் சிவபாலமுருகன் ஆகிய இருவ ரும் திருவைகுண்டம் காவல்நிலை யத்தில் புகார் செய்துள்ளனர்.
இதுகுறித்து கேள்விப்பட்ட தீண்டா மை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலை வர் காசி, மாவட்டச் செயலாளர் புவி ராஜ், மாவட்ட பொருளாளர் வைய ணப்பெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பி னர் சீனிவாசன், ஒன்றியச் செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றியக்குழு உறுப்பி னர் தங்கராஜ் ஆகியோர் பாதிக்கப்பட்ட இளைஞர்களை நேரில் சந்தித்து விப ரங்கள் அறிந்தனர். ஆற்றில் குளித்து கொண்டிருந்த தலித் இளைஞர்களை சாதியை சொல்லி திட்டிய பிற சமூகத்தை சார்ந்த ராமசாமி என்பவர் மற்றும் அவருடன் வந்த சிலர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு நிறுத்த சட்டம் 2015-ல் குறிப்பிட்டுள்ள படி தகுந்த நஷ்டஈடு வழங்க வேண்டும். இரு சமூகத்தை சார்ந்தவர்களையும் அழைத்து பேசி சமாதான கூட்டம் நடத்தி மேற்கொண்டு பதற்றம் ஏற்படாதவாறு நல்லிணக்கம் ஏற்படுத்திட உரிய நடவ டிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பா ளர், தூத்துக்குடி கோட்டாட்சியர் ஆகி யோருக்கு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் சார்பில் மனு அளித்துள்ளனர்.