தூத்துக்குடி, மே 27- தூத்துக்குடி மாவட் டம், நாரைக்கிணறு அருகே யுள்ள கொத்தாலி கிரா மத்தில் சத்திஸ்கர் மாநி லத்தைச் சேர்ந்த நாகர் மகன் சித்தன்தாஸ்(18) என்பவர் தங்கியிருந்து, அப்பகுதியில் உள்ள உள்ள சோலார் பவர் பிளாண்டில் கட்டிட வேலை செய்து வந்தார். கடந்த 2 மாத காலமாக பணிகள் நடைபெ றாததால் வருமானமின்றி தவித்துள்ளார். மேலும், அவரால் சொந்த ஊருக்கு திரும்பி செல்ல முடியாமல் மனவேதனை யில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் செவ்வா யன்று அவர், தான் தங்கியி ருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண் டார். இதுகுறித்து நாரைக் கிணறு போலீஸ் இன்ஸ்பெக் டர் (பொ) ஞானராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.