தூத்துக்குடி, ஜூன் 6- சிவகளையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில் இரண்டு முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டத் துக்கு உள்பட்ட சிவகளை கிராமத்தில் அக ழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. சிவகளை பரம்பில் 4 பகுதிகளாக அளவீடு செய்யப்பட்டு குழிதோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொல்லியல் துறை சிவகளை அகழாய்வு இயக்குநா் பிரபாகரன் மற்றும் தங்கதுரை ஆகியோரது மேற்பார்வையில் சுமார் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் இப்பணியில் ஈடு பட்டுள்ளனர். இதில், இரண்டு முதுமக்கள் தாழியின் விளிம்புப் பகுதிகள் வியாழக்கிழமை கண்டெ டுக்கப்பட்டன. இதனை தொல்லியல் துறையினா் எவ்வித சேதமும் இன்றி வெளி யில் எடுக்கும் பணியைத் தொடங்கி உள்ளனா். சிவகளையில் தொடா்ந்து நடைபெற வுள்ள அகழாய்வுப் பணிகளில் கிடைக்கும் பொருள்கள் மூலம் சுமார் 3 ஆயிரம் ஆண்டு களுக்கு முந்தைய தமிழரின் நாகரிகம் வெளிப்படும் என வரலாற்று ஆய்வாளா்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.