தூத்துக்குடி, ஜூலை 30- தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேக மாக அதிகரித்து வருகிறது. புதனன்று ஒரே நாளில் 5 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும், மாவட்டத்தில் 316 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 7ஆயிரத்தை நெருங்கி வருகிறது. மேலும் குணமடைந்தவர்கள் எண் ணிக்கை 4 ஆயிரத்து 124 ஆக உயர்ந் துள்ளது. 2 ஆயிரத்து 429 பேர் தொட ர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்து வமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற் வந்த 2 ஆண்கள் வியாழனன்று காலை உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.