tamilnadu

img

மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம்

இடதுசாரி கட்சிகள் அறைகூவல்

சென்னை,பிப்.6- மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத  பட்ஜெட்டைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த இடதுசாரி கட்சிகள் அறை கூவல் விடுத்துள்ளது. இடதுசாரிக் கட்சிகளின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில அலுவலகத்தில் பிப்ரவரி 6 அன்று நடைபெற்றது. கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயற் குழு உறுப்பினர் ப.செல்வசிங், இந்தி யக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டி யன், மாநில செயற்குழு உறுப்பினர் கோ.பழனிசாமி, நா.பெரியசாமி, மற்றும் பி.சேதுராமன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் &- லெனினிஸ்ட் &- விடுதலை) மாநிலச் செயலாளர் என்.கே.நடராஜன், மாநிலக்குழு உறுப்பினர் எம்.திரு நாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத, தேச விரோதக் கொள்கைக ளை எதிர்த்தும், மத்திய அரசின் மோச மான நிதிநிலை அறிக்கையை கண்டித் தும் பிப்ரவரி 12 முதல் 18 ஆம் தேதி வரை நாடு தழுவிய போராட்டத்தை நடத்த வேண்டும் என்ற இடதுசாரி கட்சிகளின் முடிவை தமிழ்நாட்டில் வெற்றிகரமாக நிறைவேற்றுவது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. மக்கள் சேமிப்பின் ஆதாரமாக உள்ள வங்கிகளையும், ஆயுள் காப்பீட்டுக் கழகம் உள்ளிட்ட பொ துத்துறை நிறுவனங்களையும் தனி யாருக்கு விற்பனை செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும். முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிகரித்துள்ள வேலை யின்மைக்கு முடிவுகாணும் வேலை வாய்ப்பு திட்டங்களை உருவாக்க வேண்டும். உயர் மதிப்பு பண நீக்கம், ஜிஎஸ்டி வரி விதிப்பால் தொழிற் சாலை மூடல்கள், இதன் விளைவாக ஏற்பட்ட வேலையிழப்புக்கு நிவார ணம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.21 ஆயிரம் நிர்ணயித்து வழங்க வேண்டும். கிராமப் பொருளாதாரத்தை நிலை குலைத்துள்ள விவசாய நெருக்கடி களுக்கு தீர்வு காண தவறிய மத்திய அரசு, விவசாயக் கடன்கள் அனைத் தையும் ஒருமுறை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

அரசு செலவினங்கள் குறைப்பு என்ற பெயரில் உணவு மானியம் ரூ.75,532 கோடி, மீன் வளம் உள்ளிட்ட வேளாண்மை மற்றும் அதன் தொடர்பு டைய தொழில்களுக்கு ரூ.30,683 கோடி, ஊரகப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி யளிப்புத் திட்டத்திற்கு ரூ.9,500 கோடி, சமூக நலத் திட்டங்களில் ரூ.2,640 கோடி, நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தில் ரூ.5,765 கோடி, சுகாதாரத் துறையில் ரூ.1,169 கோடி என மக்கள் நலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை வெட்டிக் குறைத்துள்ள மத்திய அர சின் நடவடிக்கை கோடிக்கணக்கான மக்களை வறுமைப் படுகுழியில் தள்ளி விடும். எனவே மேற்கண்ட மக்கள் நலத் திட்டங்களுக்கு தேவையான நிதியை முழுமையாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். 

அரசமைப்பு சட்டத்தை சிறுமைப் படுத்தி, சிதைத்து, சீர்குலைக்கும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதி வேடு, தேசிய மக்கள் தொகை கணக்கு பதிவேடு என்று மக்களையும், மக்கள் ஒற்றுமையை பிளவுபடுத்தி, தேச பாதுகாப்பை பலவீனப்படுத்தும் செயல்களை மத்திய அரசு உடனடி யாக திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை பொது மக்களிடம் விரிவாக எடுத்துச் செல்லவும், மத்திய, மாநில அரசுகளை வற்புறுத்தி பிப்ரவரி  12 முதல் 18 ஆம் தேதி வரை ஒருவார காலத்தில் வாய்ப்பான தேதிகளை தீர்மானித்து மாவட்டங்களில் ஆர்ப்பாட்டத்தை நடத்திட வேண்டு மென முடிவு செய்யப்பட்டுள்ளது.  இவ்வியக்கத்தையொட்டி விரிவான துண்டு பிரசுர விநியோக இயக்கமும், மாவட்ட (அல்லது) வட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இடதுசாரி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் கூடி இவ்வியக்கத்தை வலுவான இயக்க மாக மாவட்ட அல்லது வட்ட தலை நகர்களில் நடத்திட திட்டமிட வேண்டு மென கேட்டுக் கொள்கிறோம். இடது சாரி கட்சிகளின் சார்பில் நடைபெறும் இவ்வியக்கத்திற்கு பொதுமக்கள் பேராதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.