tamilnadu

img

6.67 லட்சம் மின்சார கட்டணம் - அதிர்ச்சியில் உறைந்த நபர்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 6.67 லட்சம் மின்சார கட்டணம் வந்ததை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார் வீட்டுஉரிமையாளர்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர் வீரபாபு . இவர் அம்பெர்பேட் எனும் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் வீரபாபுவிற்கு வழக்கம் போல வர வேண்டிய அவர் வீட்டு மின்சாரக் கட்டணம் இந்த மாதம் 6.67 லட்சம் ரூபாய் என வந்துள்ளது.  இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ள அவர், மின்சார வாரியத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு வீரபாகு தெரிவிக்கையில், வழக்கமாக 800 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை மின்சார கட்டணம் வரும். ஊழியர்கள் யாரும் மின்சார வாரியத்தில் இருந்து எங்கள் வீட்டிற்கு ரீடிங்கை குறிக்க வரவில்லை.ரீடிங்கை எடுக்காமல் எவ்விதம் கட்டணம் நிர்ணயம் செய்தார்கள் என தெரியவில்லை. புகார் அளித்தும் அதிகாரிகள் தரப்பில் எவ்வித விளக்கமோ, நடவடிக்கையோ இல்லை என கூறியுள்ளார்.

இதை பார்க்கும் போது நமக்கும் இந்த நிலை வந்துவிடுமோ என்ற அச்சம் வராமல் இல்லை.அதிமுக அரசு மின் கட்டனத்தை கட்ட கால அவகாசம் கொடுத்திருந்தாலும் ,ஒரு சில இடங்களில் கட்டனம் அதிகமாக வந்துள்ளது என மக்கள் கூறுவதும் தற்போது   நடந்து வருகிறது எனபது நிதர்சனமான உண்மை.