மன்னார்குடி, ஆக.8- மன்னார்குடி உழவர் சந்தைக்கு அருகில் நடந்து போகும் மக்களை அச்சுறுத்தும் குள த்தினை அபாயகரமான பள்ளமாக வெட்ட உத்தரவிட்டது யார்? வெட்டப்பட்ட மண் எங்கே? என்ற வினாக்களுடன் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்வேறு அரசியல் மற்றும் பொது அமை ப்புகளின்சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஆர்.ஜி.ரெத்தினக்குமார், வி.எம்.கலியபெருமாள், சீனி.தனபாலன், கோவி.மீனாட்சிசுந்தரம், சன்.சரவணன், ஜி.மீனாம்பிகை தலைமை வகித்தனர். பாய்கால் வடிகால் இல்லாத பயனற்ற அந்த குளத்தை உழவர் சந்தைக்கு அருகில் வெட்டி யதுதான் நகராட்சி நிர்வாகத்தின் ஊழலின் உச்சக்கட்டம் என்று முழக்கமிட்டனர்.