திருவாரூர், அக்.16- திருவாரூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பெரும் சுகாதாரக்கேட்டுடன் முன்மாதிரி யாக விளங்குகிறது. “தூய்மை இந்தியா இயக்கம்” என்று மத்திய மாநில அரசுகள் மார்தட்டிக் கொள்ளும் வேளையில் அதற்கு நேர்மாறாக இங்கு நிலவும் சுகாதாரக் கேட்டை மாவட்ட நிர்வாகமும், மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை நிர்வாகமும் கண்டுகொள்ளாமல் இருப்பது பெரும் வேதனை அளிப்பதாக மக்கள் கூறுகின்றனர். மருத்துவக் கல்லூரி நுழைவாயில் தொடங்கி வளா கத்தின் பல்வேறு இடங்களிலும் மற்றும் வெளித் தோற்றத்தில் எழிலாக காட்சி தரும் கட்டிடங்களின் உட் புறத்திலும் இந்த சுகாதாரக் கேட்டை நேரில் காண முடிகிறது. ஆங்காங்கே குப்பை மேடுகளும், மருத்துவ மனைக்கு வரும் புறநோயாளிகள் மற்றும் பொது மக்க ளுக்கான கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாத தால் வளாகத்தில் புதர் மண்டிக் கிடக்கும் இடங்கள் பொதுக் கழிப்பிடமாக மாறியுள்ள அவல நிலையும், முகம் சுளிக்க வைக்கிறது. இதன் காரணமாக மருத்துவமனைக்குச் செல்லக் கூடியவர்கள் நோய் தொற்று இல்லாமல் திரும்ப முடியுமா என்ற அச்சம் ஏற்படுகிறது. சுகாதார மேம்பாடு குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் அதே வேளை யில் அரசு மற்றும் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் இம்மாவட்ட மக்களின் உயிர் காக்கும் முக்கிய இடமாக விளங்கும் மருத்துவமனை வளாகத்தை தூய்மையோடும், தரத்தோ டும் பராமரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரும் கோரிக்கை வைக்கின்றனர். மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைச் சார்ந்த பல்வேறு பிரிவுகளுக்கு நிரந்தர ஊழியர்கள் இல்லாததும், குறைந்த ஊதியத்தில் ஒப்பந்த தொழிலா ளர்கள் குறிப்பாக துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டி ருப்பதாலும், போதிய அளவில் பணியாட்கள் நியமிக்கப் படாததாலும் இந்த துயரம் தொடர்கிறது. சுகாதார கேட்டின் உண்மை நிலை குறித்து எம்எஸ் வார்டு 201 பகுதியில் அமைந்துள்ள கழிவறைகள் மற்றும் சுற்றுப் புறத்தை நேரில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். எனவே சுகாதாரக் கேட்டின் தீவிரத்தை உணர்ந்து அதனை போக்குவதற்கும், நிரந்தரமாக சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும் தீவிர நடவடிக்கையினை மாவட்ட ஆட்சியரும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல் வரும் இணைந்து எடுக்க வேண்டுமென்று பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.