tamilnadu

img

திருவாரூரில் திருவிக அரசு கலைக்கல்லூரியில் போராட்டம்

தில்லியில் ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து திருவாரூரில் திருவிக அரசு கலைக்கல்லூரியில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாநில குழு உறுப்பினர் சிவனேஷ்வரி தலைமையேற்றார். மாநில துணைச் செயலாளர் ஆறு.பிரகாஷ் கண்டன உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் இரா.ஹரிசுர்ஜித் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதே போல் நன்னிலம் பாரதிதாசன் உறுப்பு கல்லூரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

;