திருத்துறைப்பூண்டி, ஜூன் 30- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ரோந்து பணியில் ஈடுபட்ட மூன்று காவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் இரண்டு தினங்களுக்கு முன்பு திரு த்துறைப்பூண்டி காவல் நிலையம் அதன் அருகிலுள்ள காவ லர் குடியிருப்பு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்க ப்பட்டது. திங்களன்று காவலர் குடியிருப்பில் உள்ள காவலர்க ளுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் கபசுர குடிநீர் மற்றும் சத்து மாத்திரைகள், முகக் கவசங்கள் வழங்கப்ப ட்டன. இந்நிகழ்ச்சி மாவட்ட துணை கண்காணிப்பாளர் பழ னிச்சாமி தலைமையில் நடைபெற்றது.