tamilnadu

img

பொறுப்பேற்பு

மன்னார்குடி, ஜூன் 17- தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு (நபார்டு) வங்கியின் தமிழ்நாடு மண்டல அலுவலகத்தின் (புதுச்சேரி உள்பட) புதிய தலைமைப் பொது மேலாளராக எஸ்.செல்வராஜ் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்த அவர் நபார்டு வங்கியில் பல்வேறு பிரிவுகளில் 35 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.  சுய உதவிக்குழுக்கள், கூட்டுப்பொறுப்பு குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்பு உள்ளிட்டவற்றுக்கு கூடுதல் கடன் உதவி களை அளித்து அவற்றை மேம்பாடு அடையச் செய்வதை முக்கிய நோக்கமாகக் கொண்டு அவர் செயல்படுவார் என நபார்டு வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.