tamilnadu

கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்

திருவள்ளூர், பிப். 26- தமிழக அரசு கால்நடை பராமரிப்புத் துறை  மூலமாக ஆறு மாதத்திற்கு ஒரு முறை  கால்  மற்றும் வாய் நோய் (கோமாரி) கட்டுப்பாட்டுத்  திட்டத்தின்கீழ் தடுப்பூசி முகாம்கள் மேற்கொண்டு வருகிறது.  தற்போது, இத்தடுப்பூசி முகாம்கள், தேசிய கால்நடை நோய்க் கட்டுப்படுத்துதல் திட்டத்தின்கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும், தகுதியுள்ள மாட்டினங்களுக்கு வரும் பிப்-28 முதல் 21  நாட்களுக்கு நடைபெறவுள்ளது.  கோமாரி நோய் வைரஸ் கிருமியால் ஏற்ப டுவதாகும். இந்நோயினால் பாதிக்கப்படும் கால்நடைகளில் காய்ச்சல், வாய், மடிக் காம்பு களில் கொப்புளங்கள், காலில் குளம்புக ளுக்கிடையே புண்கள், எச்சில் வடிதல், பசி யின்மை, உடல் மெலிதல், கால் நொண்டுதல்  போன்ற அறிகுறிகளும், பால் உற்பத்தி குறை தல், சினைப் பிடிக்கும் தன்மை குறைதல், கருச்சிதைவு, மலட்டுத் தன்மை போன்ற பக்க  விளைவுகளும் ஏற்படும்.  பாதிக்கப்பட்ட பசுக்களின் பாலைக் குடிக்கும் 3 மாத வயதிற்குட்பட்ட கன்றுகளில்  இறப்பும் ஏற்படும்.  திருவள்ளூர் மாவட்டத்தில்  14 ஒன்றியங்களில் உள்ள 5 கால்நடை மருத்து வமனைகள், 88 கால்நடை மருந்தகங்கள், 25  கால்நடை கிளை நிலையங்கள்; மூலமாக  தடுப்பூசி முகாம்கள் நடைபெறவுள்ளது. இம்  முகாம்களுக்காக கால்நடை உதவி மருத்து வர், கால்நடை ஆய்வாளர், கால்நடை பரா மரிப்பு உதவியாளர் கொண்ட 76 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினரால் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி  போடப்படவுள்ளது.  கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் குறித்து  கிராமசபா மூலம் பொது மக்களுக்கு அறி விக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத் தில் உள்ள கால்நடை வளர்ப்போர் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது கிரா மத்திற்கு வருகை தரும் கால்நடை மருத்துவக்  குழுவினருக்கு ஒத்துழைப்பு வழங்கி, பசு  மற்றும் எருமையினங்களை கோமாரி நோயி லிருந்து பாதுகாக்க கோமாரி நோய்த் தடுப்பூசி  போட்டு கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர். மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.