tamilnadu

img

சமுக விரோதிகளுக்கு துணை போகும் திருவள்ளூர் நகர காவல்துறையினர்

திருவள்ளூர், பிப். 18- சட்ட விரோதமாக மதுவிற்பனை செய்யும்  சமுக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு அனுமதியின்றி மதுக் கூடம்  நடத்துவோர் மீது தண்டிக்கப்பட வேண்டும், சமுக விரோதிகளுக்கு துணைப் போகும் திரு வள்ளூர் நகர காவல்துறையை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திங்களன்று (பிப்-17) திருவள்ளூர் பஜாரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் வட்டச் செயலாளர் ஆர். தமிழ்அரசு தலைமை தாங்கினார். இதில்  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின்  மாநிலத் தலைவர் எஸ். வாலன்டினா, கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. செல்வராஜ், மாவட்ட குழு உறுப்பினர்கள் என்.கீதா, இ.மோகனா, இ.எழிலரசன், பீடி  சங்கத்தின் மாவட்ட தலைவர் டி.ஆர்.பல ராமன், கட்டுமான சங்கத்தின் பகுதி செயலா ளர் எஸ். செந்தில்குமார், நகர கிளை செயலா ளர் எம்.உதயநிலா ஆகியோர் பேசினர். திருவள்ளூர் நகரில் பெரிய எடப்பாளை யம் பகுதியில் ராணி என்பவர் தன் மகள் திரு மணத்திற்கு வீட்டுமனையை விற்க நடவ டிக்கை மேற்கொண்டார். அப்போது அதே  பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் குறைந்த விலைக்கு வேண்டும் என வற்புறுத்தி யுள்ளார்.மேலும் பொது கிணற்றையும் ஆக்கிரமிப்பு செய்து அந்த நிலத்தை அபக ரிக்க முற்பட்டார். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன் என்பவர் ராணி மற்றும் அவரது மகளை கடு மையாக தாக்கியுள்ளார்.இது குறித்து திரு வள்ளூர் நகர காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். புகார் கொடுத்து 13-நாட்கள்  ஆகியும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால் காவல்துறையை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் பேசின மாதர் சங்க மாநில தலைவர்  எஸ். வாலன்டினா, ஒரு மதுக்கடை திறந்த  போதே மக்கள் போராடினார்கள். மீண்டும்  மற்றொரு கடையை அரசு எப்படி திறக்கிறது. இதனை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும். சட்ட விரோதமாக நடைபெற்றும் மதுக்கடையை அகற்ற சட்டமே உள்ளது. அப்படி இருக்க காவல்துறை எப்படி இதனை அனுமதித்துள்ளது.13-நாட்கள் ஆகியும் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யவில்லை.
கொலை வழக்கு பதிவு செய்க
ரவுடிகளை வளர்க்கவே காவல்துறை யினர் துணைப்போகிறன்றனர். சம்மந்தம்  இல்லாதவர்களை வழக்கில் இணைக்க கூடாது. திருவள்ளூர் அரசு மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வரும் ராணியை கொலை  செய்ய வெங்கடேசன் ஆட்கள் கடந்த திங்க ளன்று (பிப்.17) மருத்துவமனைக்கே அன்று  சென்றுள்ளார். காவல்துறை மற்றும் மருத்துவ  அதிகாரிகளையும் விலைக்கு வாங்கியுள்ள தாக சொல்லப்படுகிறது. இதனால் வெங்க டேசன் மீது கொலை வழக்கு பதிவு செய்ய  வேண்டும். திருவள்ளூர் நகர மக்கள் அமைதி யாக இருக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து மாதர் சங்கம் போரிடுகிறது.குற்ற வாளிகள் சுதந்திரமாக சுற்றி வருகின்ற னர். இது காவல்துறைக்கு தான் தலைகுனி வாகும். விரைவில் சமுக விரோதிகளை கைது  செய்யவில்லை என்றால் போராட்டம் தீவிர மாகும் என்று எச்சரித்தார்.