திருவள்ளூர், ஜூன் 20 - சாலையை ஆக்கிரமித்து நடைபெறும் கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்த வேண் டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர். ஆரணி பேரூராட்சி பஜார் தெரு அருகே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. அதன் அருகில் பெருமாள் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். அவர் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் சுமார் 16அடி நீளமும், 30அடி அகலம் கொண்ட இடத்தை ஆக்கிரமித்து படிகள், கடைகள் கட்டி வருகிறார். இதுகுறித்து முன்னாள் கவுன் சிலர் அன்னபூர்ணா அளித்த புகார் மீது நட வடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், மாதர் சங்கத்தின் சார்பில் மாவட்ட குழு உறுப்பினர் எஸ். நாகலட்சுமி, கிளை செயலாளர் எஸ்.பி.ஜெயந்தி, பொரு ளாளர் வி.முனியம்மா ஆகியோர் பேரூராட்சி யில் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில், மக்கள் பயன்படுத்தும் வழியை மறித்து, ஆளும் கட்சி துணையோடு, அடியாட்களை வைத்துக் கொண்டு கட்டுமான பணிகளை செய்து வருகின்றனர். 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அந்த இடத்தை மீட்டு பொது மக்கள் இடையூறு இன்றி சென்றுவர நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப் பட்டுள்ளது.