tamilnadu

img

இலவச பயண அட்டையை அனைத்து பேருந்துகளிலும் அனுமதித்திடுக இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்

திருவள்ளூர், பிப்.16-  இந்திய மாணவர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்டப் பேரவை ஞாயி றன்று (பிப்.16) கவரைப் பேட்டையில் நடைபெற்றது. இந்தப் பேரவைக்கு மாவட்டத் தலைவர் பா.செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் ஜே.த. வசந்த்பௌத்தா வரவேற் றார். மாநில துணைத் தலை வர் க.நிருபன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் தீ.சந்துரு, எம்.திவ்ய பாரதி ஆகியோர் சிறப்புரை யாற்றினார். மதன்குமார் நன்றி கூறினார்.
புதிய நிர்வாகிகள்
மாவட்டத் தலைவராக எம்.திவ்யபாரதி, செயலாளராக ஜே.த.வசந்த்பௌத்தா ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். 
தீர்மானங்கள்
பள்ளிகளில் முறையாக சத்துணவு வழங்க வேண்டும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும், கிராமங்களுக்கும் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும், கழிவறைகள் அமைக்கப்பட வேண்டும், திருத்தணி அரசு கலைக் கல்லூரியில் சாதி பாகுபாடு காட்டும் பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இலவச பேருந்து பயண அட்டையினை அனைத்து அரசு பேருந்து களிலும் அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.