செங்குன்றம், ஜூலை 17- செங்குன்றம் எம்.ஏ. நகர் நேதாஜி முதல் தெருவை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி லதா (38). அம்பத்தூர் அருகே புதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரிய ராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், புதனன்று (ஜூலை 17) லதா பள்ளிக்கு செல்வதற்காக தனது கணவர் பிரபுவுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். செங்குன்றம் பகுதியில் மண்டபம் அருகே ஜி.எம்.டி. சாலையில் சென்ற போது, புழல் நோக்கி வந்த மினி லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் லதா சம்பவ இடத்திலேயே பலியானார். பிரபு படுகாயம் அடைந்தார்.