திருவனந்தபுரம்:
சிபிஐ விசாரணைக்கு வழங்கப்பட்ட பொது அனுமதியை கேரள அரசும் ரத்து செய்துள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. சிபிஐ இனி மாநில அரசின் அனுமதியின்றி வழக்குகளை எடுக்க முடியாது.ஆனால் இந்த முடிவு தற்போதுநடந்துவரும் விசாரணைகளை பாதிக்காது. மாநில அரசுகளின் அதிகாரங்களை அபகரித்து சிபிஐ வழக்குகளில் மத்திய அரசின்விசாரணைநிறுவனமானசிபிஐ தலையிட்டதை அடுத்து, இத்தகைய பொது அனுமதிகளை ரத்து செய்ய பல மாநிலங்கள் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளன.