tamilnadu

வகுப்புவாதத்தின் துணையால் எங்கும் வெற்றி பெற வேண்டாம்...

திருவனந்தபுரம்:

வகுப்புவாத சக்திகளுடன் சேர்ந்துஎந்த பஞ்சாயத்திலும் வெற்றி பெறவேண்டாம். உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களை அவர்களுக்கு எதிரான போராட்டமாகமாற்றுவதே எல்டிஎப் நோக்கம் என கொடியேரி தெளிவுபடுத்தினார். கேரளாவில் வகுப்புவாத ஒருங்கிணைப்புக்கு யுடிஎப் முயலும்போது, மதச்சார்பற்ற கட்சிகளையே எல்டிஎப் வரவேற்கிறது. ஒரு காலத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின்படி ஒருபோதும் முன்னணி உறவு கூடாது என்பது ஏற்றுக்கொள்ளத்தக்க நிலைப்பாடு அல்ல.

அந்தந்த கட்டத்தில்அரசியலில் ஏற்பட்டுவரும் மாற்றங்களையே கருத்தில் கொள்ளப்படுகிறது.மீதமுள்ள யுடிஎப் அணிகளுடன் எல்டிஎப் -ஐ எதிர்கொள்ள முடியாது என்பதை உணர்ந்த அது வகுப்புவாத கட்சிகளுடன் கூட்டணி வைக்க துணிந்தது. கடந்த உள்ளாட்சி தேர்தலில் எல்டிஎப் ஒருமகத்தான வெற்றியைப் பெற்றபோது யுடிஎப்-ல் இருந்த எல்ஜேடி, ஜனநாயக கேரளா காங்கிரஸ் (எம்) ஆகியவை எல்டிஎப் உடன் உள்ளன. ஆர்எஸ்பி லெனினிஸ்ட், சிபிஐ (எம்எல்) மற்றும் ஜேஎஸ்எஸ் போன்றகட்சிகளும் ஒத்துழைக்கின்றன. கேரள காங்கிரஸ் மாணி பிரிவு எல்டிஎப் இன் ஒருபகுதி என்பது யுடிஎப்-ஐ மேலும் பலவீனப்படுத்தும்.எல்டிஎப் இன் அரசியல் வெகுஜன தளம்வலுவடைந்துள்ளது. எந்த நிபந்தனையும் இன்றி எல்டிஎப் உடன் ஒத்துழைப்பதாக ஜோஸ் கே.மணியே தனது ஆதரவை வெளிப்படுத்தினார். உள்ளாட்சித் தேர்தலில் இடங்களைப் பிரிப்பது குறித்து இப்போது விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டமன்றத்தில் உள்ள இடங்கள் குறித்து ஏப்ரல் அல்லது மார்ச் மாதங்களில் விவாதிக்கப்படும். கே.எம்.மாணியை முதலமைச்சராக்க எல்டிஎப் ஒருபோதும் திட்டமிடவில்லை என்றும், இதுபோன்ற கருத்துகள் கற்பனை பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக வருவதாகவும் கொடியேரி கூறினார்.