tamilnadu

மின்சாரம் தாக்கி பெண் பலி

திருவண்ணாமலை, நவ, 16- திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுக்கா வரவூர் கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களாக குடியிருப்பு பகுதிகளில் உயர்மின் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால், பலரது வீடுகளில் இருந்த மின் சாதனங்கள் பழுதடைந்துள்ளன. இந்நிலையில் சனிக்கிழமை காலை வீடுகளில் மின் கசிவு ஏற்பட்டு சித்ரா (40) என்பவர் மரணமடைந்தார். இதனால் ஆவேசம் அடைந்த மக்கள் திருவண்ணாமலை - கள்ளக்குறிச்சி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்து வட்டாட்சியர் பொதுமக்களி டம் பேச்சு வார்த்தை நடத்தினார்.