tamilnadu

img

கல்குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

திருவண்ணாமலை,செப்.28- திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் வட்டம் அனக்காவூர் ஒன்றியத்தில் உள்ள வீரம்பாக்கம் புதூர் மலை அடிவாரத்தில் கல்குவாரி அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  வீரம்பாக்கம் புதூர் மலைப்பகு தியை சுற்றி, மாலையிட்டங்குப்பம், காரம், எலப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. இங்கு ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். எல்லோரும் சிறு விவசாயிகளாகவும், கூலி வேலைக்குச் செல்பவர்களாகவும் இருக்கின்றனர். வீரம்பாக்கம் புதூர் மலைப்பகுதி மேய்ச்சல் புறம்போக்கு பகுதியாக இருந்து வருகிறது.  இந்நிலையில், இந்த மலைப்பகுதியின் அடிவாரத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கல்குவாரி அமைக்கப்பட்டு வருகிறது.  இதனால் கனரக வாகனங்கள் போக்குவரத்து, தண்ணீர் விரயம், இயற்கை வளம் மிக்க மலைப்பகுதி அழிவு, சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வரும் விவசாயம் முற்றிலும் அழிந்து பாலைவனமாக மாறும் அவலம் ஏற்படும்.  எனவே, இங்கு கல்குவாரி அமைக்கக்கூடாது என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.