tamilnadu

img

சிதைந்து கிடக்கும் சுகாதார வளாகம்

திருவண்ணாமலை,மே 27- திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் விண்ணுவம்பட்டு, பிள்ளையார் கோயில் தெருவில், பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட நவீன சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு வராமல் சிதிலமடைந்து வருகிறது. திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் நிலையில் மக்கள் உள்ளனர்.கலசபாக்கத்தில், நவீன சுகாதார வளாகம் ரூ. 4 லட்சத்து 50 ஆயிரம் செலவில் கடந்த 2014 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப் பட்டது. ஆனால், கட்டப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும், பயன் பாட்டிற்கு வராமல் உள்ளது. பராரமரிப்பு இல்லாததால், முட்செடிகள் வளர்ந்து கட்டடம் சேதமடைந்த நிலையில் உள்ளது. வளாகத்தை செயல்படுத்த மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தபோதும்,அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்கவில்லை. மக்களுக்கு பயன் இல்லாமல் அரசு நிதி வீணாகிறது. வளாகம் கட்டி முடித்தும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதால் அருகில் உள்ள ஆற்றுப்பகுதியே மக்களின் திறந்தவெளி கழிப்பிடமாக மாறிவருகிறது. எனவே, இதுகுறித்து அரசு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுத்தியுள்ளனர்.