திருவண்ணாமலை, ஜூலை 22- திருவண்ணாமலையை அடுத்த நல்ல வன் பாளையத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். உள்ளது. இந்த வங்கிக்கு இரவில் சென்ற 2 மர்ம நபர்கள் ஏ.டி.எம்.எந்தி ரத்தை உடைத்து அதில் இருந்த பணத்தை எடுக்க முயன்றுள்ளனர். ஆனால் எந்தி ரத்தை உடைக்க முடியாததால் பாதியில் தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து வங்கி அதிகாரிகள் திரு வண்ணாமலை தாலுகா காவல் நிலை யத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஏ.டி.எம். மையத்தில் உள்ள சிசி டிவி காட்சிகளை ஆய்வு செய்து வரு கிறார்கள்.