tamilnadu

குளிக்கச் சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

அவிநாசி, அக்.22- அவிநாசி அருகே பெரியாயிபாளையத்தில் பாறைக்குழிக்கு குளிக்க சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே பெரியாயி பாளையம் பகுதியில் வசித்து வருபவர் கஸ்தூரி(32). இவரது கணவர் தமிழ்செல்வன்(36) சென்னையில் ஆட்டோ ஓட்டுராக பணியாற்றி வருகிறார். இவர்க ளுக்கு 5 ஆம் வகுப்பு பயிலும் அயனேஸ்வரன்(10), 3ஆம் வகுப்பு பயிலும் பாலன்(9) என இரு மகன்கள் உள்ளனர். கணவர் சென்னையில் உள்ள நிலையில், பனியன் தொழிலாளியான கஸ்தூரி புதனன்று வழக் கம்போல் வேலைக்கு சென்றுள்ளார்.

திரும்பி வந்து பார்த்தபோது, இரு மகன்களும் வீட்டில் இல்லாத தால் அருகில் விசாரித்ததில், அவர்கள் தனியார் பாறைக்குழிக்கு குளிக்கச் சென்றது தெரியவந்தது.  இதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது, பாறைக்குழி அருகில் இரு மகன்களின் உடைகள் மட்டும் இருப்பதைக் கண்டு சந்தேகமடைந்த கஸ் தூரி, போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இத் தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த அவிநாசி போலீ சார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சிறுவர் களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில், பாறைக் குழியில் இருவரின் உடலும் சடலமாக மீட்கப் பட்டது. குளிக்கச் சென்ற சிறுவர்கள் சடலமாக மீட்க் கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.