அவிநாசி, ஜூன் 18- நெடுஞ்சாலைத் துறைக்கு ஆணையராக இந்திய ஆட்சிப்பணி அலு வலரை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல் வேறு கோரிக்கை நிறை வேற்றவலியுறுத்தி தமிழ் நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் அவிநாசி யில் திங்களன்று கையெ ழுத்து இயக்கம் நடை பெற்றது. சாலைப்பணியாளர்களின் வாழ்வா தார கோரிக்கைகளை 13 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போட்ட நிர்வா கத்தை கண்டித்தும், ஆணையராக இந்திய ஆட்சிப்பணி அலுவலரை நியமிக்க வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை உதவிக்கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்த கையெழுத்து இயக் கத்திற்கு கோட்ட பொருளாளர் கருப்பன் தலைமை தாங்கினார். உட்கோட்ட துணைத்தலைவர் ராமசாமி முன்னிலை வகித்தார். கோட்டச்செயலாளர் ராமன் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத் தார். உட்கோட்டப் பொருளாளர் வெங் கிட்டான் மற்றும் சாலைப்பணியாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.